×

கீழக்கரை பகுதி விவசாயிகள் வலியுறுத்தல் கீழக்கரை அருகே டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

கீழக்கரை, பிப்.13: ரெகுநாதபுரம் சேதுநகர் ஒத்தக்கடையில் டூவீலரும், நெல் அறுக்கும் இயந்திரமும் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலியாகினார். கீழக்கரை அருகே ரெகுநாதபுரம் காரான் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன்(24). இவர் பெரியபட்டிணத்திற்கு நேற்று முன்தினம் இரவு டூவீலரில் சென்றுள்ளார். சேதுநகர் ஒத்தக்கடை பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, எதிரே வந்த நெல் அறுக்கும் இயந்திரம் பொருத்திய வாகனத்தில் மோதினார். இதில் விக்னேஷ்வரன் தலை துண்டாகி பலியானார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை