×

ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தப்படுமா?

ராமநாதபுரம், பிப்.13: ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் போதுமான இருக்கை வசதி இல்லாததால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராமநாதபுரம் நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தினமும் 500க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நகர பஸ்களில் சுமார் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் தினமும் வந்து செல்கின்றனர். இதனால் அரசு, தனியார் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது. ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் தற்போது டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு பயணிகள் வசதிக்காக போதுமான இருக்கை வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் உட்காருவதற்கு இடம் இல்லாமல் தரையில் உட்கார வேண்டியுள்ளது. கூட்ட நேரங்களில் பஸ்ஸிற்காக காத்து நிற்கும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்தினர் பயணிகளின் நலன் கருதி விரைவில் இருக்கை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பயணிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பயணி லதா கூறுகையில், நகர பஸ்களுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அந்த சமயங்களில் ஒவ்வெடுக்கலாம் என்றால் குறைந்த அளவு இருக்கைகள் உள்ளதால், தினந்தோறும் சிரமப்படுகிறோம். நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Tags : facility ,Ramanathapuram ,bus station ,
× RELATED கமுதி பேருந்து நிலையத்தில் ஆட்டோ,...