×

திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர் மீது தாக்குதல்: ஜோலார்பேட்டையில் பரபரப்பு



ஜோலார்பேட்டை, பிப்.13: ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் திருவண்ணாமலை எம்பி தொகுதி பொறுப்பாளரை வாலிபர் ஒருவர் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பாய்ச்சல், சின்னமூக்கனூர் தாமலேரிமுத்தூர், கட்டேரி, அம்மையப்பன் கிராமங்களில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட துணை செயலாளர் ஆ.சம்பத்குமார், கட்டேரி ஊராட்சி செயலாளர் மோகன் தலைமை தாங்கினர். ஒன்றிய துணை செயலாளர் இந்திரஜித், ஊராட்சி பொருளாளர் டி.பண்பு, கட்டேரி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலா ஆஞ்சி முன்னிலை வகித்தனர். பாய்ச்சல் கிராமத்தில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் திருவண்ணாமலை எம்பி தொகுதி பொறுப்பாளர் இ.ஜி.சுகவனம், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி ஆகியோர் பேசினர்.

தொடர்ந்து அம்மையப்பன் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பொறுப்பாளர் இ.ஜி.சுகவனம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, குடிபோதையில் இருந்த ஒரு வாலிபர் ரகளையில் ஈடுபட்டு பொறுப்பாளர் சுகவனத்தை தாக்கி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த திமுக நிர்வாகிகள் அவரை பிடித்து கூட்டத்திலிருந்து வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து கூட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது. நிகழ்ச்சிகளில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் தண்டபாணி, இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : constituency ,DMK Panchayat ,meeting ,Jolarpettai ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...