×

அரியலூர் மாவட்டத்தில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூர்,பிப்.7: அரியலூர் மாவட்டத்தில்  கேஎம்எஸ் 2018-19ஆம் ஆண்டில் சம்பா பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அரியலூர் வட்டத்தில் திருமழப்பாடி, ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, ஓரியூர், காமரசவள்ளி, திருவெங்கனூர், உடையார்பாளையம் வட்டத்தில் முத்துவாஞ்சேரி மற்றும் ஸ்ரீபுரந்தான், செந்துறை வட்டத்தில் சன்னாசிநல்லூர் ஆகிய பத்து கிராமங்களில் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த நேரடி கொள்முதல் நிலையங்கள் நாளை   முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. எனவே, விவசாய மக்கள், அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி பயன்பெறலாம் என கலெக்டர் விஜயலட்சுமி  தெரிவித்துள்ளார்.

Tags : Purchase Purchase Centers ,Ariyalur District ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...