அரியலூர், ஜன, 31: அரியலூரில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று கல்லூரிக்கு வந்த மாணவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் பல ஆண்டு களாக குறைந்த சம்பளம் பெற்றுக் கொண்டு பணியாற்றும் கவுரவ விரிவுரை யாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வகுப்புகளை புறக்கணித்து சென்றனர்.