×

ரூ.55 ஆயிரம், வெள்ளி பொருட்கள் திருட்டு

திருச்சி, ஜன.23:  திருச்சியில் பூட்டிய கதவை உடைத்து ரூ.55 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போயின. திருச்சி, உறையூர் வயலூர் ரோடு அம்மையப்ப நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(45). இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றிருந்தார். மீண்டும் மாலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் வைத்திருந்த ரூ.55 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED நவல்பட்டு வாக்குசாவடியில் வாக்கு...