×

பணிச்சுமையால் ஊழியர்கள் புலம்பல் பாலித்தீன் பைகள் 80 கிலோ பறிமுதல்

திருமங்கலம், ஜன.23: திருமங்கலம் நகரில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாலீத்தின் பைகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.திருமங்கலம் நகராட்சி சுகாதார அலுவலர் சீனிவாசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சிக்கந்தர், சசிகலா அடங்கிய குழுவினர் நேற்று நகரில் உள்ள இறைச்சி கடைகள், சாலையோர ஓட்டல்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் திடீர் சோதனை நடத்தினர். இதில் அனுமதியின்றி கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ பாலித்தீன் கேரி பைகள், 30 கிலோ தரம் குறைந்த கருப்பு பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட பாலித்தீன்களையும் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்த வழங்க உள்ளோம் என்றனர்.

Tags :
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு