×

மின்கம்பத்தில் மோதி வாலிபர் உயிரிழப்பு

திருமங்கலம், ஜன.23: திருமங்கலம் அருகேயுள்ள பெரியஆலங்குளத்தை சேர்ந்தவர் ராமர் மகன் சோணை(25). கட்டிடத்தொழிலாளி. திருமணமாகி திவ்யா என்ற மனைவியும் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. நேற்று முன்தினம் இவர் டூவீலரில் மதுரையிலிருந்து பெரியஆலங்குளத்திற்கு வந்தார். வலையபட்டியில் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக மோதியதில் துாக்கிவீசப்பட்டு உயிரிழந்தார். பெருங்குடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : death ,
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...