×

பணம் பறித்த 2 பேர் மீது தாக்குதல்

கோவை, ஜன.23: கோவை ரத்தினபுரி நால்வர் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (60). மளிகை கடை வியாபாரி. நேற்று முன் தினம் இரவு இவர் மளிகை கடையில் வியாபாரம் முடித்து விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இவர் கையில் பேக் வைத்திருந்தார். இதில் 15 ஆயிரம் ரூபாய் இருந்தது. இந்த விவரம் அறிந்த 2 பேர் இவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்தனர். காந்திபுரம் 7வது வீதியில் அருள் பிரகாசை மடக்கி அவரது பேக்கை பறித்தனர். அவர் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் திரண்டு 2 பேரையும் மடக்கி பிடித்தனர். இவர்களை சிலர் அடித்து தாக்கினர். கைகளை துணியால் கட்டி போட்டு ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர். விசாரணையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (34), விஜயகுமார் (30) என்பது தெரியவந்தது. இவர்களில் மணிவண்ணன் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்