×

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி சாவு

சென்னை, ஜன. 23: திருத்தணி அடுத்த பொம்மராஜிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் தீபிகா (3). நேற்று முன்தினம் மாலை, வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த தீபிகா திடீரென மாயமானாள். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்து வீடுகளுக்குச் சென்று தேடினர். ஆனால், சிறுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதையடுத்து அப்பகுதி முழுவதும் தேடினர்.அப்போது, வீட்டின் அருகே உள்ள திறந்தநிலை தண்ணீர் தொட்டியில் தீபிகா இறந்துகிடந்தது தெரிந்தது. சிறுமியின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

 தகவலறிந்து திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...