×

விவசாயிகள் குறைதீர்

கூட்டம்கிருஷ்ணகிரி, ஜன.22:  கிருஷ்ணகிரியில் வருகிற 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்டம் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 25ம் தேதி(வெள்ளிக்கிழமை)காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்து மனுக்கள் மூலம் குறைகளை கேட்டறிகிறார். எனவே, இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது