ஆத்தூர், ஜன.22: ஆத்தூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ₹25 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையில், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று இரவு பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் ஆத்தூர், நாமக்கல், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஏலத்தில் கோவை, ஈரோடு, சேலம், கும்பகோணம், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மில் உரிமையாளர்கள் கலந்து கொண்டு பருத்திகளை ஏலத்தில் எடுத்தனர்.
இந்த வாரம் விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட 2000 மூட்டை பருத்தி ₹25 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்த வாரம் பருத்தியின் விலை ஆர்சிஎச் ரகம் குவிண்டால் ₹5 ஆயிரத்திலிருந்து ₹5,826 வரையிலும், டிசிஎச் ரகம் ₹6 ஆயிரத்திலிருந்து ₹6900 வரை விற்பனையானது.