×

தேன்கனிக்கோட்டை அருகே ராகி போருக்கு தீ வைப்பு

தேன்கனிக்கோட்டை, ஜன.22: தேன்கனிக்கோட்டை அருகே மர்ம ஆசாமிகள் தீ வைத்ததில் ₹50 ஆயிரம் மதிப்பிலான ராகி போர் எரிந்து நாசமானது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ஜெ.காருப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(42). விவசாயியான இவர், தன்னுடைய நிலத்தில் விளைந்த ராகி பயிரை அறுவடை செய்து கிராமத்திற்கு அருகே உள்ள பாறை மீது குவித்து வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற மர்ம ஆசாமிகள், ராகி போருக்கு தீவைத்தனர்.

அதிகாலை வரையிலும் கொளுந்து விட்டு எரிந்த தீயை கண்டு அந்த வழியாக சென்ற மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுகுறித்த தகவலின்பேரில், தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள், ராகி போர் முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ₹50 ஆயிரம் இருக்கும். தகவல் அறிந்த கெலமங்கலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று விசாரித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : war ,Ragi ,Dhenkanikottai ,
× RELATED யானை தாக்கி விவசாயி பலி