×

பயணிகள் நிழற்குடை சீரமைக்க கோரிக்கை

காங்கயம், ஜன. 22:  காங்கயம் - தாராபுரம் சாலையில் குள்ளம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடையின் சுவர் இடிந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயம் - தாராபுரம் சாலையில் குள்ளம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடையின் சுவர் இடிந்துள்ளது. மேலும் சிமென்ட் காரைகள் பெயர்ந்தும், தரை உடைந்தும் சேதமடைந்து உள்ளது.

இதனால் பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளிலும், ரோட்டேரத்திலும் நிற்கின்றனர். எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு  பழுதடைந்துள்ள பயணியர் நிழற்குடையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...