×

தேவனூர்புதூரில் திமுக., சார்பில் ஊராட்சி சபை கூட்டம்

உடுமலை, ஜன. 22: குடிமங்கலம் ஒன்றியம் பொன்னேரி மற்றும் கோட்டமங்கலம் ஊராட்சிகளில் திமுக., சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.குடிமங்கலம் ஒன்றியம் பொன்னேரி மற்றும் கோட்டமங்கலம் ஊராட்சிகளில் திமுக., சார்பில், ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. கோட்டமங்கலத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பொன்.முருகேசன் வரவேற்றார். இதில் மதுரை முன்னாள் மேயர் குழந்தை வேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

பேருந்து வசதி வேண்டும், சமத்துவபுரம் பார்க்கில் மது குடித்துவிட்டு சட்ட விரோத செயல் நடப்பதை தடுக்க வேண்டும், தெருவிளக்கு, குடிநீர் வசதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை விடுத்தனர். மேலும் சிலர், பொங்கல் பரிசு தொகை ரூ. ஆயிரம் பலருக்கு கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினர்.இதில், மாவட்ட அவைத்தலைவர் ராஜமாணிக்கம், உடுமலை நகராட்சி முன்னாள் தலைவர் வேலுசாமி,  பொதுக்குழு உறுப்பினர் ரவி,  மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஜெயபால், கணேஷ் சிவகுமார், அகிலன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் பொறியாளர் அணி துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

இதேபோல், மடத்துக்குளம் ஒன்றியம் தேவனூர்புதூர் ஊராட்சியில் ஜெயராமகிருஷ்ணன் எம்எல்ஏ., தலைமையில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் புவியரசு வரவேற்றார். ஊராட்சி செயலாளர் திருமலைச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் ரவி, முன்னாள் ஊராட்சி தலைவர் ஈஸ்வரி செழியன், வாசு, ஆண்டியூர் தங்கவேல், ரங்கநாதன், செந்தில் குமார், முருகானந்தம்  உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : DMK ,Panchayat ,council meeting ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு