×

காதலன் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

திருப்பூர், ஜன. 22: திருப்பூரில் காதலன் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் வேடசந்தூரை சேர்ந்த இடும்பன்- தேவி தம்பதியரின் மகள் பிரியதர்ஷினி (20). கடந்த சில ஆண்டாக திருப்பூர் கரும்வம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பிரியதர்ஷினி கோவையில் மலுமிச்சம்பட்டி அருகேயுள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் படிக்கும் போது சக மாணவரான பரணிதரன் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பரணிதரன் உயிரிழந்துள்ளார்.

இதனால் பிரியதர்ஷினி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் சென்ட்ரல் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : college student ,
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது