×

பிஏபி., கால்வாய் பாலத்தை விரிவுபடுத்த கோரிக்கை

உடுமலை, ஜன. 22:  உடுமலை அருகே உள்ள கண்ணமநாயக்கனூர் செல்லும் சாலையின் குறுக்கே பிஏபி உடுமலை கால்வாய் பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. உடுமலை அருகே உள்ள கண்ணமநாயக்கனூர் செல்லும் சாலையின் குறுக்கே பிஏபி உடுமலை கால்வாய் செல்கிறது. இந்த பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இந்த கால்வாய் தோண்டப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்ட பாலம் என்பது குறிப்பிடதக்கது. தற்போது பாலத்தின் மறுபகுதியில் 20க்கும் மேற்பட்ட நகர் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வழியே வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

ஆனால் இந்த பாலம் வழியே மினி பஸ் மட்டுமே செல்ல முடியும். அரசு பேருந்துகள் செல்ல முடிவதில்லை. இதனால் மேற்கண்ட கிராமங்களுக்கு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தாலும், குறுகலான பாலத்தை காரணம் காட்டி இதுவரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பஸ் ஏற அப்பகுதி மக்கள் 7 கி.மீ., தூரம் சுற்றி வர வேண்டி உள்ளது. எனவே, இந்த பாலத்தை இடித்து அகலமான புதிய பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : PAP ,canal bridge ,
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில்...