×

திருப்பூர் அருகே தாயை தவறாக பேசிய தம்பியை கொன்ற அண்ணன் கைது

திருப்பூர், ஜன. 22:  திருப்பூர், செல்லம் நகர் பகுதியை சேர்ந்த தர்மராஜ் - காமாட்சி தம்பதியினருக்கு, பிரகாஷ் (30), விக்னேஷ் (21) என்ற இரு மகன் உள்ளனர். இதில், பிரகாசுக்கு திருமணமானம் ஆகிவிட்டது. 5 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சகோதரர்கள் இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விக்னேஷ் வீட்டை விட்டு வெளியேறினார். நேற்று முன்தினம் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியான சின்னக்கரை ஓடை பகுதியில் கழுத்தில் காயங்களுடன் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில் அண்ணன் பிரகாஷிடம் போலீசார் விசாரித்ததில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மது போதையில் இருந்த விக்னேஷ் தங்களது தாயை தவறாக பேசியுள்ளார்.

இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் விக்னேஷ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர், கடந்த 19ம் தேதி இரவு விக்னேசை தொடர்பு கொண்டு சின்னக்ரை ஓடை பகுதியில் மது அருந்த அழைத்து சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது விக்னேஷ் மீண்டும் தனது தாயையும், அண்ணியையும் தவறாக பேசியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த பிரகாஷ் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து விக்னேஷ் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, வீரபாண்டி போலீசார் நேற்று பிரகாசை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Brother ,Tirupur ,
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...