×

லாரி மோதியதில் நிதி நிறுவன ஊழியர் பலி

உத்தமபாளையம், ஜன.22:  உத்தமபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிதிநிறுவன ஊழியர் பலியானார்.
உத்தமபாளையம் ஆர்.சி. வடக்கு தெருவை சேர்ந்தவர் தேவசகாயம் மகன் சகாயசெல்வன் (42), இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர். உள்ளூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிப்பவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு டூவீலரில் கம்பத்தில் உள்ள விசேஷ வீட்டிற்கு சென்றார். பின்பு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த லாரி பின்புறமாக வந்த டூவீலர் மீது மோதியதில் சகாய செல்வன் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த சகாயசெல்வனை உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரிடிரைவர் க.புதுப்பட்டியை சேர்ந்த உதயகுமார்(32) என்பவரை கைது செய்தனர்.

Tags : Lorry ,institution ,
× RELATED கஞ்சா சப்ளை செய்த லாரி டிரைவர் கைது