×

‘சொத்துக்காக இரட்டை கொலை செய்தோம்’ கைதானவர்கள் வாக்குமூலம்

போடி, ஜன. 22: போடியில் நேற்று முன்தினம் நடந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் சிறையிலடைக்கப்பட்டனர். ெமாத்த சொத்தையும் அத்தை மகன் பெயருக்கு எழுதி வைத்து விடுவேன் என்று மிரட்டியதால் இருவரையும் கொன்றதாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். போடியிலுள்ள டிவிகேகே நகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (60). இவரது தங்கை மகன் பாண்டி இருவரும் நேற்று முன்தினம் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர்.

இக்கொலைகள் ெதாடர்பாக ஈஸ்வரன் மகன் கமலக்கண்ணன்(22), ஈஸ்வரன் அண்ணன் காமராஜ் மகன் கார்த்திக் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நகர் காவல் நிலைய   இன்ஸ்பெக்டர்(பொ) வெங்கடாஜலபதி கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், மொத்த சொத்தையும் அத்தை மகன் பாண்டியன் பெயரில் எழுதி வைத்து விடுவதாக மிரட்டியதால் ஆத்திரமடைந்து இருவரையும் கொன்றதாக கமலக்கண்ணன், கார்த்திக் கூறியுள்ளனர். அவர்களை நேற்று  கோர்ட்டில் ஆஜர் செய்து மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Tags : murder ,detainees ,
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...