×

முத்துத்தேவன்பட்டியில் தியாகிகளுக்கு பாடலஞ்சலி ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தேனி, ஜன. 22:  தேனியில் நடந்த தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் வரும் ஜன. 30ம் தேதி தியாகிகளுக்கு பாடலஞ்சலி நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.தேனியில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் சமிதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சங்க தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் எழுத்தாளர் குப்புசாமி, கோகுலே உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், முத்துத்தேவன்பட்டியில் மணிமண்டபம் கட்ட மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியுள்ள நிலத்தில்,  ஜன. 30ல் தியாகிகள் தினத்தன்று தியாகிகளின் புகைப்படங்களை கண்காட்சியாக வைத்தும், தியாகிகளுக்கு பாடலஞ்சலி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Tags : martyrs ,
× RELATED ‘தீயணைப்போர் தியாகிகள் தினம்’ உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி