×

சின்னமனூர் அருகே நெடுஞ்சாலையில் ஓடும் கழிவுநீர் தொற்றுநோய் பீதி

சின்னமனூர் , ஜன.22: சின்னமனூர் அருகே மாநில நெடுஞ்சாலையில் ஆறு போல சாக்கடை ஓடுவதால் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
சின்னமனூர் அருகே எஸ்.தருமத்துப்பட்டி கிராமம் உள்ளது. சின்னமனூர் - போடி மாநில நெடுஞ்சாலையில் இந்த ஊர் அமைந்துள்ளது. வீடு மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மாநில நெடுஞ்சாலையில் குறுக்கே கடந்து செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சின்னமனூரிலிருந்தும், உத்தமபாளையத்திலிருந்தும் போடிக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இச்சாலை வழியே தான் செல்கின்றன. அதிகம் கடந்து வருகிறது. மேலும் விவசாயத்திற்கு பயன் படுத்திடும் மற்ற பொது மக்களின் வாகனங்களும் அடிக்கடி கடந்து வருவதால் ஒட்டுநர்கள் அனைவரும் சாக்கடை சாலையை கடக்கும் போது முகம் சுளித்து வருகின்றனர். ஆறாக ஓடும் சாக்கடையால் தற்போது சாலையும் சேதமாகி வருகிறது. எனவே, இப்பகுதியில் வாறுகால் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sewerous ,highway ,Chinnamanur ,
× RELATED கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு