வருசநாடு, ஜன.22: கடமலை - மயிலை ஒன்றியத்தில் மூன்று ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கடமலைக்குண்டு, தங்கம்மாள்புரம், குமணன்தொழு ஆகிய மூன்று ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கடமலைக்குண்டு ஊராட்சி செயலாளர் தென்னரசு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரபாகரன், எல்.எஸ்.சுப்ரமணி ஆகியோர் தலைமை தாங்கினார். கடமலை - மயிலை ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதில் தேனி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கருப்பசாமிபாண்டியன், ஆண்டிபட்டி முன்னாள் எம்எல்ஏ ஆசையன் சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் குரு இளங்கோ, ஊராட்சி செயலாளர்கள் பழனிச்சாமி, ஆனந்தன், ஜெயச்சந்திரன், முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கடமலை - மயிலை ஒன்றியத்தில் அடிப்படை வசதியின்மை பற்றியும், முதியோர் உதவித் தொகை கிடைக்காது குறித்தும் பலர் புகார் கூறினர்.