×

பிப்.1ல் விவசாயிகள்குறைதீர் கூட்டம்

திருச்சி, ஜன.22:  திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 1ம் தேதி நடக்கிறது. திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 25ம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு 1.2.2019 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அ்லுவலக கூட்டமன்றத்தில், நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை, இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். விவசாயிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி கலெக்டர் ராஜாமணி கேட்டுக்கொண்டுள்ளார்.






Tags : Meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...