×

தொழில் திறன் பயிலரங்கம்

சிவகங்கை, ஜன.22: இளையான்குடியில் ஜன.24ல் தொழில் திறன் பயிலரங்கம் நடக்க உள்ளது. சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் தெரிவித்ததாவது: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் வகையில் திறன் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் ஜன.24ல் இளையான்குடி டாக்டர் ஜாகிர்உசேன் கலைக்கல்லூரியில் தொழில் திறன் பயிலரங்கம் நடக்க உள்ளது.இதில் தனியார் துறை திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு திறன் பயிற்சி பெறவுள்ள பயனாளிகளை பதிவு செய்ய உள்ளனர். எனவே வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறும் பயனாளிகள் அனைவரும் ஜன.24, காலை 10.30 மணி அளவில் கல்லூரிக்கு வருகை தந்து திறன் பயிற்சி பயிலரங்கத்தில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Professional Skills Workshop ,
× RELATED மது விற்றவர் கைது