×

சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களால் விபத்து அபாயம்

ஊட்டி, ஜன. 22:  நீலகிரி மாவட்டத்தில் தற்போது மத்திய அரசின் நிதியுதவியுடன் புதிதாக பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, ஏற்கனவே உள்ள குறைந்த உயரம் கொண்டு சிமெண்ட் கம்பங்கள் மற்றும் இரும்பு கம்பங்களை மாற்றும் பணியில் மின் வாரியம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, ஏராளமான மின்கம்பங்கள் கொண்டு வரப்பட்டு சாலையோரங்களில் போடப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையோரங்களில் மெரிலேண்ட், மைனலைமட்டம் போன்ற பகுதிகளில் சாலையை ஒட்டியே போடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் இவ்வழித்தடத்தில் வரும் வாகனங்கள் ஒன்றிற்கு ஒன்று வழிவிட்டு செல்லும் போது இந்த மின் கம்பங்கள் உள்ளது தெரியாமல் அவற்றின் மீது ஏறி விபத்து ஏற்படுகிறது. எனவே, இந்த மின் கம்பங்களை சாலையோரங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...