×

சமையல் செய்தபோது தீயில் கருகி பெண் பலி

செம்பட்டி, ஜன. 22: நிலக்கோட்டை அருகே பிள்ளையார்நத்தம் அடுத்த மாலப்பட்டியை சேர்ந்தவர் பூமிநாதன்(30). விவசாய கூலி தொழிலாளியான இவரது மனைவி கோசலைதேவி. இவர்களுக்கு ஒரு வயதில் சரிதா என்ற பெண் குழந்தை உள்ளது. சம்பவதன்று தோட்ட குடியிருப்பில் உள்ள தனது தோட்டத்தில் கோசலைதேவி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது சோலையில் திடீரென தீ பிடித்து அது உடல் முழுவதும் எரிந்து பலத்த காயமடைந்தார். இதன் பின்னர் உறவினர்கள் கோசலைதேவியை நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன்றி பரிதாபதாக இறந்தார். இது குறித்து விளாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : lady ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...