×

குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

கொடைக்கானல், ஜன. 22: கொடைக்கானலில் குடும்ப பிரச்சினை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது. கொடைக்கானல் அண்ணாநகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி வனிதா(27). இவர்களுக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் நிறைவடையாத நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் கணவன், மனைவி மீண்டும் தகராறு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து வனிதா மனமுடைந்து வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வனிதாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில் தற்கொலை செய்து கொண்டதால் கொடைக்கானல் ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு