×

லோடுமேன் கொலையில் 4 பேர் கைது

சிவகாசி. ஜன. 22: சிவகாசியில் லோடுமேனை படுகொலை செய்த 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். சிவகாசி வம்பிழுத்தான் முக்கு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் கருப்பசாமி (20). லோடுமேன். இவர், வேலாயுத ரஸ்தாவில் தனியார் திருமண மண்டபம் அருகே நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்துக்கு வந்த சிவகாசி டவுன் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீஸ் விசாரணையில், ‘கருப்பசாமியின் அத்தை மகளை அதே பகுதியை சேர்ந்த முத்தையா மகன் மணிகண்டன் காதலி–்த்ததாக கூறப்படுகிறது. இதனை கருப்பசாமி தட்டிக்கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மணிகண்டன் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து கருப்பசாமியை கொலை செய்துவிட்டு தப்பினார் என தெரிய வந்தது.
இந்த கொலை தொடர்பாக மணிகண்டன், சிவகாசி கல்லரை தெரு முத்துகருப்பசாமி மகன் ஜெயக்கண்ணன், லிங்கபுரம் காலனியை சேர்ந்த பூமிநாதன் மகன் பால்பாண்டி, முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த முத்துபாண்டி மகன் முத்துக்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : murder ,Ladomman ,
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...