×

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை கண்டித்து ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன.22: கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை கண்டித்து ஜேக்டோ ஜியோ சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை டவுன்ஹாலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஜேக்டோ ஒருங்கிணைப்பாளர் தங்கபாசு தலைமை வகித்தார். இதில் கோவை மாவட்டத்தில் ஆசிரியர்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் ஈடுபட்டு வருவதை கண்டிப்பது, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது தன்னிச்சையாக ஊதியம் பிடிக்கும் போக்கை கைவிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களை எல்.கே.ஜிக்கு பாடம் நடத்த சொல்லும் அரசானையை ரத்து செய்ய வேண்டும். அரசானை 100 மற்றும் 100ஈ ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு எதிராக ஆனைகள் பிறப்பிப்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஜாக்டோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத் குமார், ஜியோ சங்க மாவட்ட செயலாளர் குமார், உள்ளிட்ட ஜேக்டோ ஜியோ சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்

Tags : demonstration ,district primary education officer ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்