×

தொண்டாமுத்தூர் அருகே கார் மோதி ஐயப்ப பக்தர் பலி

தொண்டாமுத்தூர், ஜன.22: தொண்டாமுத்தூர் அருகே கார் மோதி ஐயப்ப பக்தர் பலியானார். கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத். (40). சலவை தொழிலாளி. இவர் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்திருந்தார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி வேன் மூலம் அவரது நண்பர்களுடன் சபரிமலை சென்று கொண்டிருந்தார்.  அப்போது தொண்டாமுத்தூர் காளம்பாளையம் பகுதியில் வேனை நிறுத்தி டீ குடித்து குடித்துள்ளனர்.

அப்போது மஞ்சுநாத் சாலையை கடக்க முயன்றுள்ளார். அவ்வழியாக எதிரே வந்த கார் மஞ்சுநாத் மீது  மோதியது. இதில் படுகாயமடைந்தவரை சக நண்பர்கள் மீட்டு அந்த வேனிலேயே கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து தொடர்பாக கோவை உப்புகார வீதியை சேர்ந்த கார் ஓட்டுநர் ஸ்ரீதர் என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Ayyappa ,devotee ,Thondamuthur ,
× RELATED பொள்ளாச்சி தொகுதி பொது மக்கள்...