×

விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு இஎஸ்ஐ நிவாரணம்

கோவை, ஜன. 22:  கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மொபைல் கம்பெனியில் பணிபுரிந்து வந்தவர் ஷானவித் (28). இவர், கடந்த 02.06.2018 அன்று பணி நிமித்தமாக வாடிக்கையாளரை சந்தித்துவிட்டு, நிறுவனத்துக்கு திரும்பியபோது சாலை விபத்தில் இறந்து விட்டார். இவரது குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க, கோவை இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் கூடுதல் ஆணையாளர் ரகுராமன் (பொறுப்பு) உத்தரவிட்டார். அதன்படி, ஷானவித்  பெற்றொருக்கு 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கணக்கிட்டு நிவாரண நிலுவைத்தொகையாக ரூ.28,620/- மற்றும் மாதாந்திர பென்சன் தொகை ரூ.4,110/- வழங்க முடிவுசெய்யப்பட்டது. இதற்கான ஒப்புதல் கடிதத்தை கோவை காட்டூர் கிளை இஎஸ்ஐ மேலாளர் பிரேமானந்தன் வழங்கினார். நிகழ்ச்சியில், இஎஸ்ஐ பணியாளர்கள் நடராஜன், கார்த்திக், ரத்தினக்குமார் மற்றும் தனியார் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : ESI ,accident ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...