×

தஞ்சை மாவட்டத்தில் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை

தஞ்சை, ஜன. 22:  திருவையாறு ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்துக்கு வரும் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருவையாறில் நடந்து வரும் தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்துக்கு வரும் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அன்றைய தினம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. அதற்கு பதிலாக வரும் பிப்ரவரி 16ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும். மேலும் அந்நிய செலாவணி முழு சட்டத்தின்கீழ் இந்த உள்ளூர் விடுமுறை வராது என்பதால் மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் வரும் 25ம் தேதி செயல்படும். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.




Tags : holiday ,Thanjavur district ,
× RELATED ஏப்ரல் 2 முதல் தேர்வுகள் தொடக்கம் 1...