×

என்னை கருணை கொலை செய்யுங்கள் கைக்குழந்தையுடன் கதறிய இளம்பெண்

ஈரோடு,ஜன.22:  கணவருடன் சேர்த்து வையுங்கள் இல்லாவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என கைக்குழந்தையுடன் வந்து இளம்பெண் அதிகாரிகளிடம் கதறி அழுததால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையம் சுப்பையன் வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் மனைவி புவனேஸ்வரி.இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளரான விநாயகமூர்த்தி என்பவரது மகன் வெங்கடேஷ் என்பவருக்கும், எனக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது.  முதலில் பெண் குழந்தை பிறந்தது.

இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் எனது கணவர் வெங்கடேஷ், மாமியார் யசோதா, மாமனார் விநாயகமூர்த்தி, கணவரின் சகோதரி கிருஷ்ணவேணி என்னை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.  எனது கணவர் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான என்னை ஒதுக்கிவிட்டு இரண்டாவது திருமணம் செய்துள்ளார். எனவே, கணவருடன் என்னை சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கருணைக்கொலை செய்துவிடுங்கள். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார். கைக்குழந்தையுடன் சென்று மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் அந்த இளம்பெண் புவனேஸ்வரி கதறி அழுதார்.

Tags :
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது