×

கும்பகோணத்தில் அரிசி கடையின் பூட்ைட திறந்து பணம் ெகாள்ளை

கும்பகோணம், ஜன. 22:  கும்பகோணத்தில் உள்ள அரிசி கடையின் பூட்டை திறந்து ரூ.30 ஆயிரத்தை ெகாள்ளையடித்து ெசன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் துக்காம்பாளைய தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (39). இவர் கும்பகோணம் இந்திராகாந்தி சாலையில் அரிசி கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டரில் இருந்த பூட்டுகள் திறக்கப்பட்டிருந்தது. மேலும் அரிசி கடையும் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியை உடைத்து ரூ.30 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசில்  செல்வராஜ் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : rice store ,Kumbakonam ,
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்