×

நிலப்பிரச்னைசமாதானம் பேச வந்தவரைவழிமறித்து தாக்கியவர் கைது

வேதாரண்யம், ஜன.22: வேதாரண்யம் அருகே நிலப்பிரச்னை குறித்து சமாதானம் பேச வந்தவரை வழிமறித்து தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம் அடுத்த செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேலு (78). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கலாநிதி என்பவருக்கும் பொதுவாக வழி மற்றும் நிலம் சம்மந்தமாக பிரச்னை இருந்து வந்தது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செம்போடை ராமச்சந்திரன் (52) என்பவர் வேதாரண்யத்திற்கு வந்தார். அவரை தங்கவேலு வழிமறித்து தரக்குறைவாக பேசி தாக்கினாராம்.
இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்கு பதிவு செய்து தங்கவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு