×

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் தீ விபத்து

ஈரோடு, ஜன.22: ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் மாயக்கண்ணன் (65). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வருகிறார். மேல்தளத்தில் ஒரு அறையை வாடகைக்கு விட்டுள்ளார். மற்றொரு அறை கம்ப்யூட்டர், டிவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்துள்ளார். நேற்று இரவு இவரது வீட்டின் மேல்தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில், மற்றொரு அறையில் இருந்த கம்ப்யூட்டர், டிவி, துணி மற்றும் பாத்திரங்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து மாயக்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுக்கிறது. இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : home ,
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...