×

மணமேல்குடி அருகே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்

மணமேல்குடி,ஜன.22:  மணமேல்கடி அருகே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயமானார்.
மணமேல்குடி அடுத்த பொன்னகரம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீரங்கம் மகன் பிரபுதேவா (25). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். அதிகாலை மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவர் கரை திரும்பவில்லை. இதனால் பதறிப்போன உறவினர்கள் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையிலான போலீ சார் ரோந்து படகின் மூலம் கடலுக்குள் சென்று தேடி பார்த்தனர். அப்போது நாட்டுபடகு மட்டும் சுமார் 2 மைல் தொலைவில் தனியாக கிடந்தது.
உடனே போலீசார் அந்த பகுதியில் தண்ணீரில் மூழ்கி தேடினர். ஆனால் பிரபு தேவா கிடைக்க வில்லை. தனியாக மீன்பிடிக்க சென்ற பிரபுதேவா படகு மட்டும் கிடக்கிறது. அவருடைய நிலை என்னவென்று தெரியாமல் போலீசார் கடலில் தேடி
வருகின்றனர்.






Tags : sea ,Manamkuldi ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...