×

சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மணமேல்குடி,ஜன.22: மணமேல்குடியில் வருவாய்த்துறை சார்பில் கள்ளசாராயத்திற்கு எதிரான விழிப் புணர்வு பேரணி நடை பெற்றது. வட்டாட்சியர் வில்லியம் மோசஸ் முன்னிலை வகித்தார். கோட்ட கலால் அலுவலர் செல்வநாயகம் பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்டவர்கள், கள்ளச்சாராயம் மற்றும் மதுவினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த விழிப்புணர்வு வாசக பதாகைகளை ஏந்தி சென்ற னர். பேரணி மணமேல்குடி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கி கடைவீதி வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தை சென்றடைந்தது. பேரணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...