கறம்பக்குடி, ஜன.22: கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தை 100நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்க கோரி பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே முள்ளங்குருச்சி ஊராட்சிக்கு ட்பட்ட கோட்டைக்காடு கிராம பொது மக்கள் மற்றும் பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், சம்பளம் வழங்க கோரி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கிராம ஊராட்சியர் சதாசிவம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.