ஆலங்குடி,ஜன.22: ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் மேற்கு ஒன்றியம், பாத்தம்பட்டியில் திமுக சார்பாக ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. எம்எல்ஏ மெய்யநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பாத்தம்பட்டி ஊராட்சி யில் உள்ள அனைத்து கிராமத்திற்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய கடன்கள், கல்விக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும். குடிநீர் வசதி ஏற்படுத்திய தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இந்த கிராம சபை கூட்டத்தில் புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டு, ஆதார் அட்டை கிடைப்பத்தில் தாமதம் ஏற்படுவதாகவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரியும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் எம்எல்ஏ மெய்யநாதனிடம் மனு அளித்தனர்.