×

கந்தர்வகோட்டை பகுதிகளில் இன்று திமுக ஊராட்சி சபை கூட்டம்

கந்தர்வகோட்டை, ஜன.22:  திமுக  சார்பில் அனைத்து பகுதிகளிலும் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்படும் என திமுக  தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி ஊராட்சி சபை  கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இன்று ஆத்தங்கரைவிடுதியில் காலை 10 மணிக்கும், துவாரில் காலை 11 மணிக்கும்,  மட்டாங்காலில் மதியம் 2 மணிக்கும், அக்கச்சிபட்டியில்  3 மணிக்கும்,  கந்தர்வகோட்டையில் மாலை 4 மணிக்கும் நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில்  மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் சச்சிதானந்தம் மற்றும் வடக்கு மாவட்ட  பொறுப்பாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இதில் அனைவரும்  திரளாக பங்கேற்க வேண்டும் என கந்தர்வகோட்டை  தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்  பரமசிவம் தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,council meeting ,areas ,Gandharvat ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்