×

ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்கஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

பெரம்பலூர், ஜன.22: வளர்ப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை வளர்ப் பதற்கு ஆர்வமுள்ள, தகுதி வாய்ந்த பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் சாந்தா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:பெற்றோர், பாதுகாவலர் எவருமின்றி குழந்தைகள் இல்லங்களில் வளரும் குழந் தைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள், பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந் தைகள், சிறையில் உள்ளவர்களின் குழந்தைகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், உடல், மனம், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குள்ளான குழந்தைகள், இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என 6 முதல் 18வயது வரையுள்ள ஆதரவற்ற அனைத்து குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான குடும்ப சூழலை ஏற்படுத்தி கொடுப்பதற்காக வளர்ப்பு, பராமரிப்பு என்றத் திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் செயல்படுத்த பட்டுவருகிறது.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் வெளியிடப்பட் டுள்ள திருத்தப்பட்ட வளர்ப்பு பராமரிப்பு மாதிரி வழிகாட்டு நெறிமுறைகள் 2016ல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வளர்ப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஆர்வமுள்ள, தகுதி வாய்ந்த பெற்றோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் என்பவர், பெற்ற குழந்தைகளை வளர்ப்பவர்களாகவோ, குழந்தை இல்லாதவர்களாகவோ, தத்தெடுப்பதற்குரிய தகுதிகளுடன் குழந்தையை தத்தெடுக்க காத்திருப்பவர்களாகவோ, குழந்தைகளை தத்தெடுக்க தகுதியில்லாதவர்களாகவோ இருக்கலாம்.வளர்ப்பு பராமரிப்பில் வளர்க்கப்படும் குழந்தைக்கு போதுமான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், கல்வி மற்றும் இதர அடிப்படை வசதிகளை செய்துதரும் அளவிற்கு வளர்ப்பு பராமரிப்பு பெற்றோருக்கு பொருளாதார வசதி இருக்க வேண்டும். இவ்வாறு வளர்ப்பு பராமரிப்பு திட்டத்திலிருக்கும் குழந்தைகள் குறுகியகாலம் அல்லது நீண்டகாலம் அல்லது குழந்தையின் 18வயது முடியும்வரை வளர்ப்பு பராமரிப்பு பெற்றோருடன் இருக்க அனுமதி வழங்கப்படும். வளர்ப்பு பராமரிப்புத் திட்டத்தை செயல் படுத்துவதில் குழந்தையின் விருப்பமும் குழந்தையின் சிறந்த எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தை நலக்குழுவின் மூலம் எடுக்கப்படும் முடிவே இறுதியானதாகும்.
வளர்ப்பு பராமரிப்புத் திட்டத்தின்கீழ் குழந்தைகளை வளர்ப்பதற்கு விருப்பமுள் ளவர்கள் விண்ணப்பங்கள் பெறுவதற்கும் இதர நிபந்தனைகனை தெரிந்து கொள்வ தற்கும் எண்.164, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின்ரோடு, பெரம்பலூர் என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அல்லது குழந்தை நலக்குழுவினை அணுகலாம். மேலும் கூடுதல் விபரங்களை 04328-275020 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.






Tags : Rewarders ,
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா