×

இடத்தகராறில் ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது

ஜெயங்கொண்டம், ஜன.22: ஜெயங்கொண்டம் அருகே இடத்தகராறில்  ஒருவரை இரும்பு  கம்பியால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
 ஜெயங்கொண்டம் அருகே உள்ள குளத்தூர் கீழத்தெருவை சேர்ந்தவர் அறிவழகன்(48). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த புகழேந்தி(52) ஆகிய இருவருக்கும் இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அறிவழகன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புகழேந்தி அறிவழகனிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு இரும்பு  கம்பியால் தலையில் அடித்துவிட்டு சென்றுவிட்டார்.படுகாயமடைந்த அறிவழகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிந்து புகழேந்தியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : victims ,
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...