×

ஜெயங்கொண்டத்தில் ஏடிஎஸ்பியை பதவி நீக்க கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம், ஜன.22: ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணியின் மாநில இணை அமைப்பாளரான பொன்னையாவை ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தாக்கியதை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் நான்கு ரோட்டில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் திருமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட துணை தலைவர் பழனிசாமி கண்டன உரையாற்றினார். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.


Tags : demonstration ,resignation ,ATPS ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்