×

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தகுறைதீர் கூட்டத்தில் 215 மனுக்கள் குவிந்தன

பெரம்பலூர்,ஜன.22: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, தனித்துணை கலெக்டர் மனோகரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற் றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டாமாற்றம், தொழில்தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 215மனுக்களை கலெக்டர் சாந்தாவிடம் நேரடியாக கொடுத்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம், குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை தருமாறு அறிவுறுத்தினார்.மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள்மீது தனிகவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்ற வேண்டும் என்று அர சுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



Tags : petitions ,office ,Perambalur Collector ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 221 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை