×

புதுப்பட்டினம் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை

திருக்கழுக்குன்றம், ஜன.22: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டினம் ஊராட்சியில் 40 துப்புரவுப் பணியாளர்கள் வேலைப் பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு புதுப்பட்டினம் வியாபாரிகள் சங்கம் சார்பில் இலவச வேட்டி சேலை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, வியாபாரிகள் சங்கத் தலைவர் காதர் உசேன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் கிங்உசேன், பொருளாளர் பாபுலால், செயலாளர் சுகுமார், நிர்வாகிகள் பட்ராஜ், வெற்றி, பாபு, சம்சுகனி, காதர்பாஷா, நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் போது புதுப்பட்டினம் ஊராட்சியில் பணிபுரிகின்ற 40 துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
முடிவில் ஊராட்சி செயலாளர் கன்னியப்பன் நன்றி கூறினார்.

Tags : cleaning staff ,Puducherry Panchayat ,
× RELATED எஸ்.ஐ. வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு