×

வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

காஞ்சிபுரம், ஜன.22:காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுமார் 50 குடும்பத்தினர் குடியிருக்க வீட்டு மனைப்பட்டா கேட்டு மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனு விவரம்:காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூர் புளியந்ப்பு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம்.  மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் வசிக்கும் எங்கள் குடும்பங்களில் அரசு ஊழியர் யாரும் இல்லை.

நாங்கள் அனைவரும் தினக்கூலிகளாக வேலை செய்து ஜீவனம் நடத்தி வருகிறோம். இதனால் வீடோ, வீட்டு மனையோ வாங்கக்கூடிய வசதி எங்களுக்கு இல்லை. எனவே, நாங்கள் வசித்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அந்த மனுவில் கூறியுள்ளனர். இதேபோன்று, ஸ்ரீபெரும்புதூர் தாலுகா மணிமங்கலம், காந்தி நகரைச் சேரந்த பெருமாள் என்பவரும் இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின்கீழ் இருப்பிடத்தை வரைமுறை செய்து பட்டா வழங்க வேண்டும் மாவட்ட வருவாய் அலுவரிடம்  கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...