×

ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு கட்டு கட்டாக புதரில் பணம்? 3 பேரிடம் போலீசார் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு கட்டு கட்டாக புதரில் பணம்?  3 பேரிடம் போலீசார் விசாரணைபெரும்புதூர், ஜன.22: புதரில் கட்டு கட்டாக பணம் எடுத்ததாக, 3 பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே எச்சூர் கிராமத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன் 2 சுற்றுலா பையில், கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. அதை எச்சூர் பகுதியை சோ்ந்த 3 பேர் கண்டெடுத்தனர். அந்த பணத்தில் ஒரு டூரிஸ்ட் வேன், மற்றொருவர் 30 சவரன் நகை வாங்கியதாகவும் 3வது நபர் உறவினர்களுக்கு பணத்தை பிரித்து கொடுத்ததாக, அதே கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் கூறினார். இது காட்டு தீப்போல் அப்பகுதி முழுவதும் பரவியது.

இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு நேற்று சென்றனர். இதுபற்றி இளம்பெண்ணிடம் விசாரித்தனா். அப்போது அந்த பெண், 3 பேரை அடையாளம் காட்டினார். அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். மேலும், பணம் இருந்த இடத்தை அடையாளம் காட்டுவதற்காக இளம்பெண்ணை கிராமம் முழுவதும் அழைத்து சென்றனர். சுமார் 2 மணிநேரம் வயல்வெளி, கழனி, தோப்பு பகுதிகளில் சோதனை செய்தனர். பின்னர், அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால், சந்தேகமடைந்த போலீசார், இளம்பெண்ணின் உறவினர்களிடம் விசாரித்தனர். அப்போது, அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிந்தது. ஆனாலும் போலீசார், இளம்பெண் அடையாளம் காட்டிய 3 பேரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனா்.

Tags : Sriperumbudur Police ,
× RELATED பென்னலூர் ஊராட்சியில் மண் திருட்டை...