சின்னசேலம், ஜன. 22: கல்வராயன்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லியம்பாடி கிராமத்தில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உதயசூரியன் தலைமை தாங்கினார். கல்வராயன்மலை (தெ) ஒன்றிய செயலாளர் சின்னதம்பி முன்னிலை வகித்தார். பொட்டியம் ஊராட்சி செயலர் லட்சுமணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் உதயசூரியன் எம்எல்ஏ திமுக ஆட்சிக்காலத்தில் மலை மக்களுக்கு செய்த திட்டங்கள் பற்றி
விரிவாக பேசினார். அப்போது பொதுமக்கள் குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ கூறினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் தனபால், முத்துசாமி, முன்னாள் சேர்மன் விமலா ராஜவேல், குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதைப்போல தொரடிப்பட்டு, வெள்ளிமலை, உள்ளிட்ட பகுதிகளில்திமுக ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.